(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர், அக்டோபர்- 3
நாட்டின் மிகப் பெரிய இந்திய வர்த்தக அமைப்பின் ஆண்டுக்கூட்டம் தொடர்பான விவகாரத்தில், மாநில அமைப்புகளிடையே கடும் வாக்கும் வாதம் நிலவி வருவதாகத் தகவல் கசித்துள்ளது.
இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதனால், ஒரு சில மாநில வர்த்தக அமைப்புகள் சேர்த்துக் கொள்ளப்படாத காரணத்தினாலும், அவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கபடாததாலும் அதில் ஒரு மாநில வர்த்தக அமைப்பு ஆர்.ஓ .எஸ் எனப்படும் சங்கங்களுன் பதிவிலாகாவிடம் புகார் கொடுத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அதே நேரத்தில், அந்த மிக பெரிய அமைப்பின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருத்தர் மீது பணக் கையாடால் தொடர்பான புகாரையும் இந்த மாநில அமைப்பு வழங்கியுள்ளது.
இதனால் அந்த மிகப் பெரிய இந்திய வர்த்தக அமைப்பில், கடந்த சில தினங்களாக அமளி துமிளி நிலவருகிறது.
0 Comments