கோலாலம்பூர் அக்டோபர் - 3
கோவிட்-19 பாதிப்பால் சுமார் ஒரு வருடத்திற்கு மேல் மலேசியர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்.
தற்போது அரசாங்கம் சில தளர்வுகளை மக்களுக்கு வழங்கியுள்ள நிலையில், முன்னாள் விலாயா மலேசிய முன்னாள் இந்திய இளைஞர் மணிமன்றம் விளையாட்டுடன் ஓர் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தனர்.
தலைநகர் பிரேம் மால் பேரங்காடியில் போலீங் விளையாட்டுப் போட்டியை குணரத்னம், கந்தா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் 15 குழுக்கள் கலந்துகொண்ட நிலையில், முன்னாள் இந்திய இளைஞர் மன்ற உறுப்பினர்களும் இப்போது அந்த மன்றத்தில் சேவை செய்யும் இளைஞர்களும் கலந்து கொண்டதாக விலாயா மாநில முன்னாள் மலேசிய இந்திய இளைஞர் மன்ற தலைவர் டத்தோ காந்தாராவ் தெரிவித்தார்.
இது இரு வாயதினருக்கும் இடையே ஒரு உறவை ஏற்படுத்துவதோடு, நீண்ட காலமாக விளையாட்டு சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடாத நிலையில், பலருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என டத்தோ காந்தராவ் தெரிவித்தார்.
0 Comments