கோலாலம்பூர், அக்டோபர் 3: டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் ம.இ.கா தேர்தலில் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என, ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இன்று அறிவித்துள்ளார்.
கட்சி தற்போது சுமூகமான சூழலில் இருந்து வரும் வேளையில், கட்சிக்குள் தேவையில்லாத பூசல்களும், ஆரோக்கியமற்ற தன்மையைத் தடுக்கவும் போட்டியைத் தவிர்ப்பதே சிறப்பு என அவர் தமது கருத்தை முன் வைத்துள்ளார்.
மேலும் இரண்டு முறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சமுதாயத்திற்கும், கட்சிக்கும் தனி ஒரு அமைச்சராக இடைவிடாத கடமைகளை ஆற்றிவரும் மனித வள அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணனுக்குக் கட்சியின் சார்பில் வழங்கப்படும் மிகப்பெரும் ஆதரவாக இது அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments