loader
வனிதாவைக் கைது செய்ய பிக்பாஸ் வீட்டிற்கு வந்த போலீஸார்!

வனிதாவைக் கைது செய்ய பிக்பாஸ் வீட்டிற்கு வந்த போலீஸார்!

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. கடந்த 2000-ஆம் ஆண்டில் ஆகாஷ் என்ற டிவி நடிகரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.   இவர்களுக்கு விஜய் ஸ்ரீகரி என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற மகள்  உள்ளார்.  இதன் பின்னர் வனிதாவுக்கும் ஆகாஷுக்கும் விவாகரத்து ஆனது.  2007-ஆம் ஆண்டில் ஆனந்தராஜ் என்பவரை மறு திருமணம் செய்துகொண்டார் வனிதா.  இவர்களுக்கு ஜெயந்திகா என்ற மகள் பிறந்தார்.

2010-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆனந்தராஜையும் விவாகரத்து செய்த வனிதா, நடன இயக்குநரைக் காதலித்து வருவதாகத் தகவல்.

தற்போது அவர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் முதல் நாள் அறிமுக நிகழ்ச்சி்யில் வனிதாவுடன் இரு பெண் குழந்தைகளும் வந்திருந்தனர்.

தந்தை ஆனந்தராஜுடன் ஜெயந்திகா தெலுங்கானாவில் வசித்து வந்தார்.  மகள் ஜெயந்திகாவைக் கடந்த பிப்ரவரி மாதம் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்றுக்கொண்ட அம்மாநில போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வனிதா சென்றுவிட்டதால் தாயும் இல்லாமல் மகள்  கஷ்டப்படுவார் என்று ஆனந்தராஜ் போலீசாரிடம் அழுத்தம் கொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் வனிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாட்டு போலீசை உதவியை நாடியது தெலுங்கானா போலீஸ். 

இதனையடுத்து வனிதாவைச் சந்திக்க பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர் போலீசார்.   பிக்பாஸ் சட்ட விதிமுறைகளின்படி தற்போது வனிதா வெளியே வரமுடியாது என்பதை அறிந்து கொண்ட போலீசார், அது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்!








 

0 Comments

leave a reply

Recent News