கோலாலம்பூர், அக் 3: அகில மலேசிய நட்புறவு இயக்கங்களின் ஒருங்கிணைப்புச் சங்கமான 'சஹாபாட் மலேசியா' ஏற்பாடு செய்திருக்கும் அதிர்ஷ்டக் குலுக்கு திட்டத்தை, மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் இன்று காலை ம.இ.கா தலைமையகத்தில் துவக்கி வைத்தார்.
இந்தியர்களின் சமூக, பொருளாதார ரீதியிலான மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு 'சஹாபாட் மலேசியா' உருவாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், இந்தியர்களின் மேம்பாட்டுக்காக இந்த இயக்கம் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்ததோடு, தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
0 Comments