பகாங், அக் 2: பகாங், பெந்தோங்கில் உள்ள கம்போங் பாரு காராக்கில் நேற்று இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட பயங்கரத் தீச்சம்பவத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் தீயில் அழிந்தன.
இது குறித்த படங்களை கெதாரி சட்டமன்ற உறுப்பினர் சைஃபுரா ஒஸ்மான் நேற்று இரவு ட்விட்டரில் பதிவேற்றியுள்ளதோடு, மேலும் இரண்டு மண்டபங்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும், உயிர்ச் சேதம் எதுவும் இல்லை என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் போது, அங்குள்ள கடை மற்றும் வீடுகளின் சுமார் 150 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது,
இந்நிலையில், இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக காராக் நகருக்கு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்!
0 Comments