loader
ஒரே குடும்பத்தில் ஆறு பேர் கைது!

ஒரே குடும்பத்தில் ஆறு பேர் கைது!

 

மலாக்கா, செப் 29:  போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை மலாக்கா காவல்துறை கைது செய்துள்ளது.

மிசாய் என்று அழைக்கப்படும் அக்குடும்பத்தின் தலைவரான 64 வயது ஆடவர் முதலில் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தலைமை இணை ஆணையர் டத்தோ வீரா அப்துல் மஜீத் முஹம்மது அலி கூறினார். அடுத்த சில தினங்களுக்குப் பின்னர் அவரது மகன்களும், மருமகளும் கைதாகியாதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தக் குடும்பத்தின் மூத்தக் குடிமகன் இந்தக் கும்பலின் மூளையாகவும் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். சில காலமாக இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டிருந்த அவர், பின்னர் அதில் தனது மகன்களையும் மருமகளையும் சேர்த்துக் கொண்டுள்ளதாக தெரியவந்தது.

மேலும் அலோர்காஜா வீட்டில் இருந்து 7.5 கிலோ எடைகொண்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சந்தை மதிப்பு 223,000 ரிங்கிட் ஆகும், என காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்குப் போதைப் பழக்கம் இருப்பது பரிசோதனையில் உறுதியானது என்றும், ஏற்கெனவே போதைப்பொருள் புகார்களில் சிக்கியவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

0 Comments

leave a reply

Recent News