கோலாலம்பூர், ஜூலை 25: பிப்ரவரி 24 -ஆம் தேதி தொடங்கப்பட்ட தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் 16,904,896 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.
மலேசியாவில் 5,397,826 பேர் சனிக்கிழமை (ஜூலை 24) இரவு 11.59 மணி நிலவரப்படி முழு இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர் என்று கூறினார்.
மொத்தம் 11,507,070 பேர் தங்கள் முதல் டோஸைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார்.
தினசரி தடுப்பூசி விகிதத்தில், நேற்று 417,738 மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 284,672 நபர்கள் முதல் டோஸையும், 133,066 பேருக்கு இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்!
0 Comments