புத்ராஜெயா, ஜூலை 23: இன்று ஒரே நாளில் 15,573 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 980,491 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் மட்டும் 144 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த மரண எண்ணிக்கை 7,718 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 10,094 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 825,387 ஆக உயர்ந்துள்ளது.
147,386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 939 பேர், வெண்டிலேட்டர் ஆதரவில் 456 உள்ளனர்.
சிலாங்கூரில் மட்டும் இன்று அதிகபட்சமாக 7,672 சம்பவங்கள் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது!
0 Comments