கோலாலம்பூர், ஜூலை 22 : பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவு தர மறுப்பதால் தன் மீது வழக்கு பாய்ந்துள்ளதாக முன்னாள் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பெரிக்காத்தானுக்கு ஆதரவு தருவதை விட தாம் வழக்கைச் சந்திக்கத் தயார் என அவர் கூறியுள்ளார்.
இதற்கெல்லாம் நான் பின்வாங்க மாட்டேன். சத்தியம் ஒருநாள் வெல்லும். அரசியலுக்காக என் என்னை விற்று விடமாட்டேன் என சைட் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் எப்போதெல்லாம் கூடுகிறதோ, அப்போதெல்லாம் இது மாதிரியான நெருக்கடிகள் தமக்குத் தரப்படுவதாகவும், தற்போது ஜூலை 26-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவிருக்கும் வேளையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments