கோலாலம்பூர், ஜூலை 20: கோலாலம்பூரில் உள்ள தேசிய மசூதியில் பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் இன்று தியாகத் திருநாள் பிரார்த்தனையில் கலந்துகொண்டார்.
பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் சுமார் 300 பேர் கொண்ட சபையில் இணைந்தார்.
வெள்ளை அங்கி அணிந்திருந்த முஹைதீன் மற்றும் அவரது மனைவி புவான் ஸ்ரீ நூரெய்னி அப்துல் ரஹ்மான் ஆகியோர் காலை 8.16 மணியளவில் இப்பிரார்த்தனையில் கலந்துகொண்டார்.
காலை 9.05 மணியளவில் தேசிய மசூதியில் இருந்து பிரதமர் தம்பதியர் வெளியேறினர்!
- பெர்னாமா
0 Comments