loader
கோவிட் -19: இன்று 10,972 புதிய சம்பவங்கள்! 129 மரணங்கள்!

கோவிட் -19: இன்று 10,972 புதிய சம்பவங்கள்! 129 மரணங்கள்!

 

 

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19: மலேசியாவில் திங்கள்கிழமை (ஜூலை 19) 10,972 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 927,533 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலம்  4,404 நோய்த்தொற்றுகளுடன்  அதிக எண்ணிக்கையில் உள்ளது என்று அவர் கூறினார்.

மேலும், 129 பேர் உயிரிழந்தனர்
இதனால் இறப்பு எண்ணிக்கை 7,148 ஆக உயர்ந்துள்ளது.

6,439 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  நாடு முழுவதும் 791,388 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இன்னும் 915 நோயாளிகள் உள்ளனர். 435 பேருக்கு வென்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News