loader
பிணவறைக்கு கொள்கலன் உதவி! டத்தோ டாக்டர் மூர்த்தி வழங்கினார்!

பிணவறைக்கு கொள்கலன் உதவி! டத்தோ டாக்டர் மூர்த்தி வழங்கினார்!

கோலாலம்பூர், ஜூலை 17: சமூகச் சேவையாளரான டத்தோ டாக்டர் மூர்த்தி நடேசன், 40 அடி நீளம் கொண்ட கொள்கலனை மருத்துவமனையின்  பிணவறைக்கு இலவசமாக வழங்கினார். இதன் மதிப்பு 34,000ஆகும்.

கோவிட் மரண எண்ணிக்கை அதிகரித்ததன் காரணத்தால் செலாயாங் மருத்துவமனைக்குக் கொள்கலன் பிணவறை தேவைப்படுவதாக அதன் தடயவியல் பிரிவு விடுத்த கோரிக்கைக்குச் செவிமடுத்து இந்த உதவி நல்கப்பட்டுள்ளது.

செலாயாங் மருத்துவமனைக்குப் பிணங்களை வைப்பதற்கான கொள்கலன் தேவை என்ற செய்தி அறிந்ததும், நண்பர்களுடன் இணைந்து இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்ததாக டத்தோ டாக்டர் மூர்த்தி கூறினார். மேலும், இந்த இக்கட்டான சூழலில் மருத்துவம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு உதவிகள் தொடரப்பட வேண்டும் என்றும், மக்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

செலாயாங் மருத்துவமனைக்குக் கொள்கலன் தேவை என்ற செய்தியை அறிந்தவுடன்,  உடனடியாகச் சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஷாபியை தொடர்பு கொண்டு, அதனை வழங்குவதற்கு உறுதியளித்தாக அவர் கூறினார்.

இன்று மதியம் 2 மணியளவில் செலாயாங் மருத்துவமனை நிர்வாகத்திடம் டத்தோ டாக்டர் மூர்த்தி கொள்கலனை ஒப்படைத்தார். உடன் சமூகச் சேவையாளர் டத்தோஶ்ரீ ஜெயந்திரனும் உடனிருந்தார்!

0 Comments

leave a reply

Recent News