loader
மீண்டும் மீண்டும் அவதூறு வீடியோ! கணேஸ் நடராஜா மீது போலீஸ் புகார்!

மீண்டும் மீண்டும் அவதூறு வீடியோ! கணேஸ் நடராஜா மீது போலீஸ் புகார்!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 16:

தற்போது ஜெர்மனியில் இருந்துகொண்டு மலேசியா நாட்டு அரசியல், அரசியல் தலைவர்கள், சமூகம், அரச சபை எனப் பல  சர்சைக்குரிய அவதூறு வீடியோவை வெளியிட்டு வரும், மலேசியப் பிரஜையான கணேஸ் நடராஜா என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சமூக ஆர்வலரான ரூபன்ராஜ்  மற்றும்  நந்தகுமார் ஆகியோர் போலீஸ் புகார் செய்துள்ளனர்.

ஏற்கனவே சில சர்ச்சைக்குரிய வீடியோவை அவர் வெளியிட்டது தொடர்பாக, போலீஸ் அவர் மீது விசாரணை மேற்கொண்டு வரும்நிலையில்,  மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்துக்கொண்டு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி அவதூறு பரப்பி வருகிறார். எனவே, கணேஸ் நடராஜா மீது அரச மலேசிய போலீஸ் படை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருக்கும் அவரைப் பிடித்து வந்து மலேசிய சட்டத்திற்கு முன் நிறுத்தவேண்டும் என தங்களது புகாரில் ரூபன்ராஜ் மற்றும் நந்தகுமார் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு மலேசியாவிலும் யாரோ உதவி செய்து வருவதோடு, அவருடை வீடியோக்களை பகிர்ந்து கலக்கத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸார்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், புலனம் வழி ஒரு குழுவாகவும் அவர்கள் செயல்படுவதாக இருவரும் தெரிவித்தனர்!

0 Comments

leave a reply

Recent News