loader
அதிர்ச்சி! ஒரே நாளில் 13 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா! சிலாங்கூரில் மட்டும் 6,120

அதிர்ச்சி! ஒரே நாளில் 13 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா! சிலாங்கூரில் மட்டும் 6,120

 

புத்ராஜெயா, ஜூலை 15: மலேசியாவின் கோவிட் -19 எண்ணிக்கை இன்று இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை (ஜூலை 15) 13,215 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் நாட்டின் மொத்த நோய்தொற்று சம்பவங்களின்  எண்ணிக்கை 880,782 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

சிலாங்கூரில் மட்டும் 6,120 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

1,603 சம்பவங்களுடன் நெகிரி செம்பிலான் இரண்டாவது இடத்தில் உள்ளது. கோலாலம்பூரில் 1,499 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

 

0 Comments

leave a reply

Recent News