கோலாலம்பூர், ஜூலை 15: இன்று ஜூலை 15 முதல் தேசிய பாதுகாப்பு இயக்குநர் ஜெனரலாக 57 வயதான டத்தோ ரோட்ஸி பின் மொஹமட் சாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை ஒரு கடிதம் வாயிலாக நாட்டின் தலைமைச் செயலாளர்
டான் ஸ்ரீ மொஹமட் ஸூகி பின் அலி தெரிவித்துள்ளார்.
மலாயா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவரான டத்தோ ரோட்ஸி, சிவில் சேவையில் 31 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
பாதுகாப்பு மற்றும் பல்வேறு துறைகளில் விரிவான அனுபவம் கொண்டவர்.
பாதுகாப்பு கவுன்சிலை வழிநடத்தும் திறன் கொண்டவர் டத்தோ ரோட்ஸி என்று தாம் நம்புவதாக அக்கடிதத்தில் மொஹமட் ஸூகி பின் அலி குறிப்பிட்டுள்ளார்!
0 Comments