loader
12 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன!

12 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன!

 

பெட்டாலிங் ஜெயா, ஜூலின்14:  செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) நிலவரப்படி மலேசியா மொத்தம் 12,212,730 கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கல் வழங்கப்பட்டுள்ளதாக கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் சிறப்புக் குழு (ஜே.கே.ஜே.வி) தெரிவித்துள்ளது.

கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் 8,364,354 மருந்துகள் இன்றுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும், தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் தொடங்கியதில் இருந்து 3,848, 376 பேர் தங்களது இரண்டாவது தடுப்பூசி டோஸைப் பெற்றுள்ளதாகவும் ஜே.கே.ஜே.வி தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாயன்று 424,541 டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும், 260,286 பேர் முதல் டோஸைப் பெற்றதாகவும், மேலும் 164,255 பேர் இரண்டாவது டோஸைப் பெற்றதாகவும் ஜே.கே.ஜே.வி தெரிவித்துள்ளது.

0 Comments

leave a reply

Recent News