கோலாலம்பூர் ஜூன் 20-
கடந்த ஜூன் 11 மைக்கி ஏற்பாட்டில் தலைநகரில் மனிதவள அமைச்சருடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது அமைச்சர் குலசேகரனிடம் இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்னை தொடர்பாக ஒரு மகஜரும் வழங்கப்பட்டது. கிட்டதட்ட 38 வர்த்தகச் சங்கங்கள் ஒருங்கிணைந்து, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தொகுத்து மகஜராக வழங்கியுள்ள நிலையில், இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மைக்கி அலுவலகத்தில் நடைபெற்றது.
மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தலைமையில், வர்த்தகச் சங்கத் தலைவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
மைக்கி தலைவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டு காலமாக இந்தியர்கள் அதிகம் ஈடுபட்டுவரும் 7 துறைகளுக்கு, அந்நிய தொழிலாளர்கள் அனுமதி வழங்காமல் முடக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நாங்கள் அமைச்சர் குலசேகரனிடம் விளக்கியுள்ளோம். அவரும் எங்கள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க பிரதமரிடம் பேசவிருப்பதாகவும், அமைச்சரவையில் விவாதிப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் எதிர்வரும் ஜூலை மாதம் மைக்கி வர்த்தகச் சங்கங்களுடன் பிரதமரைச் சந்திக்க உள்ளோம். அவரிடம் நிலைமையை எடுதுரைக்க உள்ளோம். எங்கள் பிரச்னையைச் செவிசாய்த்து நல்ல தீர்வினை விரைந்து எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்!
0 Comments