புத்ராஜெயா, ஜூலை 13:
மனிதவள அமைச்சு கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் பயன்படுத்தக் கூடிய வழிகாட்டியை உருவாக்கியுள்ளது.
காற்று வழி கோவிட்-19 பெருந்தொற்றைத் தடுக்க இந்த முறைகளைக் கையாள முன்மொழியப்படுகிறது.
காற்று வழி கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க வேலை இடங்கள், சுகாதாரப் பகுதிகள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் காற்றின் தரத்தையும் காற்றோட்டத்தையும் மேம்படுத்தும் வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
குளிரூட்டியைப் பயன்படுத்தும் இடங்களுக்கு 4 முக்கியமான முறைகள் இந்த வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் காற்றுத் தர வழிமுறைகளுடன் எஸ்.ஓ.பி விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது!
0 Comments