கோலாலம்பூர் ஜுலை-13: தற்போது கோவிட்-19 தாக்கத்தால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை உயர்வுக்குச் சுகாதார இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம்தான் காரணம் என்பது போல், அவரால் நடப்பு கோவிட் சூழலைச் சரியான முறையில் கையாளத் தெரியவில்லை என்ற ரீதியில், அவரைப் பதவி விலக வேண்டும் என அமைச்சர் அஸ்மின் அலியின் சிறப்பு அதிகாரி அட்லின் சப்ரி டுவீட் செய்துள்ளார்.
இதனையடுத்து அவருக்குப் பொதுமக்கள் இடையே பெரும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. அமைச்சர் அஸ்மின் அலி அதிகாரியின் இந்த டுவிட்டால் அஸ்மினையும் விமர்சித்து வருகின்றனர் பொதுமக்கள்!
0 Comments