கோலாலம்பூர், ஜூலை 12 : நாட்டில் இன்று 8,574 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மூன்று நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக 9,000 சம்பவங்களுக்குக் கீழ் குறைந்தது. ஆனால், தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) நோயாளிகளின் எண்ணிக்கை மிக உயர்ந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது. 964 பேர் ஐயூவில் உள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நாட்டில் ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 844,870 -ஐ எட்டியுள்ளது.
சிலாங்கூரில் மட்டும் 4,308 சம்பவங்கள் பதிவாகி, தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.
கோலாலம்பூர் (609) மற்றும் கெடா (415) சம்பவங்கள் பதிவாகியுள்ளன!
0 Comments