loader
அதிகரிக்கும் கொரோனா! கார் நிறுத்தும் இடத்தில் அவசர வார்டுகள்!

அதிகரிக்கும் கொரோனா! கார் நிறுத்தும் இடத்தில் அவசர வார்டுகள்!


கோலாலம்பூர், ஜூலை 10: கோவிட் 19 அதிகரிப்பின் காரணமாக அரசு மருத்துவமனைகளில் உள்ள பயிற்சி மருத்துவர்களின் வீடுகள் மற்றும் வெளிநோயாளிகள் பகுதிகள் அனைத்தும் தற்போது நோயாளிகளின் வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையும் இதில் அடங்கும் என டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

நோயாளிகளின் வருகை அதிகரிப்பின் காரணமாக தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை முன்பு, மருத்துவமனைக்கு வெளியே தற்காலிகப் படுக்கைகளை அமைத்துள்ளனர். தற்போது படுக்கைகள் கட்டிடத்திற்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்சா மாஜுவில் உள்ள துவாங்கு மிஸான் இராணுவ மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் அவசர வார்டு அமைக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News