கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் அதனால் ஏற்பட்ட நெருக்கடிகளால், உலகம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் கென்யாவின் நைரோபியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிய வறுமை எதிர்ப்பு இயக்கமான 'ஆக்ஸ்பாம்' ஆய்வு ஒன்றை நடத்தியது.
சமீபத்தில் வெளியான அந்த ஆய்வின் அறிக்கையில், 'கொரோனா பரவல் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலக அளவில் பட்டினியால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் உயிரிழந்து வருவது தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை 2 கோடியாக அதிகரித்துள்ளது!
0 Comments