கோலாலம்பூர், ஜூலை 9: அம்னோவின் முடிவு பொருத்தமான ஒன்று என மலேசிய மக்கள் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை, அம்னோ மீட்டுக் கொண்ட செயல் வரவேற்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.
மக்களின் நலன்களை பேண இந்த அரசு தவறிவிட்டது என்றும், சுயநலம் கருதியே அவர்கள் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெற்று அறிக்கைகளை மட்டுமே சொல்லி, அரசியல் செய்கிறது இந்த அரசு. நிர்வாகச் செயலின்மையால் மக்கள் சிக்கலுக்குள்ளாகியுருக்கிறார்கள். நடப்பு கொரோனா பிரச்னைக்கும், பொருளாதாரச் சிக்கல்களுக்கும் சரியான தீர்வினை இந்த அரசால் ஏற்படுத்த இயலவில்லை என்று டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
0 Comments