கோலாலம்பூர் ஜூலை-5
மிகப் பெரிய அளவில் எதிர்வரும் ஜூலை 10-ஆம் தேதி இசை நிகழ்ச்சியுடன் அறிமுகம் காணவிருந்த நாதஸ்வர தவில் நுண்கலை அகாடமி, கோவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அகில மலேசிய நாதஸ்வரம் தவில் கலைஞர்கள் இயக்கத் தலைவர் கணேசன் பிள்ளை தெரிவித்தார்.
இந்த அறிமுக விழா ஜனவரி மாதம் நடத்தப்படும் என தெரிவித்த கணேசன் பிள்ளை, ஆகஸ்ட் மாதம் தொடங்கி இளங்கலை வாயிலாக நாதஸ்வர தவில் நுண்கலை கல்வி ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
70 வருடங்களாகச் செயல்பட்டுவரும் சென்னை தமிழ் இசை சங்கத்தின் ஒத்துழைப்புடன், இந்த அகாடெமி இளங்கலை வாயிலாக நடத்தப்படும் என தெரிவித்த கணேசன் பிள்ளை, நம் நாட்டு கலைஞர்கள் அதிலும் அடுத்த தலைமுறையை இந்தக் கலையில் ஈடுபடுத்தும் முயற்சியில் சங்கம் தீவிரமாக செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்!
0 Comments