கோலாலம்பூர், ஜூன் 4: செரிமான பிரச்னை மற்றும் நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி அலுவலகம் (பி.எம்.ஓ) இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் பிரதமரிடம் நடத்தப்பட்ட ஒரு விரிவான சுகாதார பரிசோதனையில், அவரது கட்டி மீண்டும் வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
டாக்டர்களின் ஆலோசனையைப் பின்பற்றி, முஹைதீன் மருத்துவமனையில் தங்கியிருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அவர் தனது கடமைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் குணமடைவதற்குப் பிரார்த்தனை செய்த பொதுமக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 30 அன்று பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!
0 Comments