புத்ராஜெயா, ஜூலை 1: மலேசியாவில் இன்று, 6,983 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த கொரோனா சம்பவங்கள் 758,967 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 84 பேர் மரணமடைந்துள்ளனர். நாட்டின் மொத்த மரண எண்ணிக்கை 5,254 ஆக உயர்ந்துள்ளது.
இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,580 இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 688,260.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 65,453 பேர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் 917 பேர். வெண்டிலேட்டர் வசதி தேவைப்படுகிறவர்கள் 445.
சிலாங்கூரில் அதிகபட்சமாக 2,885 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது எல்லா மாநிலங்களை விடவும் மிக உயர்ந்த எண்ணிக்கை ஆகும்!
0 Comments