சென்னை ஜுன்-15
கோவிட்-19 தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இக்காலக்கட்டத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனி விமானம் வயிலாக இந்தியாவை விட்டு வெளியேறவிருப்பதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக தனி விமானத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ள ரஜினி, இது தொடர்பாக சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அவருடன் குடும்பத்தாரும் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், சிகிச்சைக்குப் பிறகு கொஞ்ச காலம் சூப்பர் ஸ்டார் அமெரிக்காவில் ஒய்வு பெறவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
'அண்ணாத்த' படப்பிடிப்பு முடிந்து இன்னும் டப்பிங் வேலைகள் எஞ்சியுள்ள நிலையில், தீபாவளிக்கு அத்திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த் சிகிச்சைக்குப் பிறகு டப்பிங் பணியில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது!
0 Comments