loader
இந்தியாவில் ஒரே நாளில் அதிகமான இறப்பு! கொரொனாவின் கொடூரம்!

இந்தியாவில் ஒரே நாளில் அதிகமான இறப்பு! கொரொனாவின் கொடூரம்!

புதுடெல்லி, ஜூன் 12: இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் 5-வது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.

நேற்றைய உயிரிழப்பு எண்ணிக்கையான 2,197 உடன் பீகார் அளித்த உயிரிழப்பு எண்ணிக்கையான 3,951 உயிரிழப்புகள் சேர்க்கப்பட்டு நேற்றுமட்டும் இந்தியாவில் புதிய உச்சமாக 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,002 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 84 ஆயிரத்து 332 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 59 ஆயிரத்து 155 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 4,002 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,67,081 ஆக உயர்ந்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News