loader
வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி! டிக் டாக் பரிதாபம்...

வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி! டிக் டாக் பரிதாபம்...

தமிழ்நாடு:
டிக்-டாக் செயலி மூலம் வெளியாகும் வீடியோக்கள், சமூகத்தில் சீரழிவுகளை ஏற்படுத்தி வருவது அண்மைய காலமாக அதிகரித்து வருகிறது. இதில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். ஆபாச வசனம், அளவுக்கதிகமான கவர்ச்சி உடைகளில் வெளியாகும் இந்த வீடியோக்களைப் பலர் ரசித்து தங்களது கருத்துகளைப் பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

ஒரு சிலர் தாங்கள் செய்யும் விபரீதச் செயல்களையும் இந்த டிக்-டாக் வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள். அப்படியான ஒரு சம்பவம்தான் அண்மையில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

பெரம்பூரைச் சேந்த அனிதா என்பவர் (வயது 24).  தன் கணவர் பழனிவேல் திட்டியதால் விஷம் குடிப்பது போல் ஒரு வீடியோவை டிக் டாக்கில் பதிவு செய்துள்ளார். ஆனால், அது விபரீதமாகி தற்போது அந்தப் பெண்ணின் உயிரையே பறித்துவிட்டது.

அனிதாவின் கணவர் பழனிவேலு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் குழந்தைகளுடன் தனியாக  வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தில் பொறுப்புடன் குடும்பம் நடத்தி வந்த அனிதாவின் வாழ்க்கையில் எமனாக டிக்-டாக் செயலி வந்தது.

https://img.maalaimalar.com/InlineImage/201906121039100012_1_tik-tok._L_styvpf.jpg
டிக் டாக் செயலியைத் தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அனிதா அதிலேயே மூழ்கினார். குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் சாப்பாடு கூட தயார் செய்து கொடுக்காமல் டிக்-டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாகக் காட்டுவது போன்றவற்றைப் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்துள்ளார்.

அவரது செயல்பாடு குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவரும் மனைவியை போனில் கண்டித்தார். இதற்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகள் மோனிஷா கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அனிதா இருந்துள்ளார்.

தகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதனைத் தனது கடைசி விருப்பமாக டிக்-டாக் செயலி மூலம் வீடியோவாகப் பதிவு செய்தார்.

வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்த அவர், பின்னர் தண்ணீரைக் குடிக்கிறார். ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை எட்டுகிறது. இப்படி வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அனிதா  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

நவீன மோகம் ஓர் உயிரை வெகு எளிதாய் பலியாக்கிவிடுகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்!

https://img.maalaimalar.com/InlineImage/201906121039100012_2_sdfhdskj._L_styvpf.jpg

 

0 Comments

leave a reply

Recent News