சென்னை: பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் ரெம்டிசிவர் மருந்து வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் வரும் 18-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் , ஆக்சிஜன் மற்றும் மருந்து தேவையை இணையதளத்தில் பதிவிட வசதி ஏற்படுத்தப்படும் எனவும், தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவர் மருந்தை நேரடியாக பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!
0 Comments