சென்னை, மே 7: நடிகர், இயக்குனர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனை அவர்களது மகன் நடிகர் சாந்தனு சமூகவலைதளத்தில் கூறியுள்ளார்.
தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இருவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி, மருத்துவர்கள் ஆலோசனையின்படி சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
வீட்டில் உள்ளவர்கள், வேலை செய்கிறவர்கள் என அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்திருக்கும் சாந்தனு, கடந்த 10 தினங்கள் தங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது பெற்றோர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யும்படியும் சாந்தனு வேண்டுகோள் விடுத்துள்ளார்!
0 Comments