loader
போராட்டத்தில் ஈடுபட்டால் இதுதான் நிலைமை! - மியன்மார் ராணுவத்தின் வெறிச்செயல்

போராட்டத்தில் ஈடுபட்டால் இதுதான் நிலைமை! - மியன்மார் ராணுவத்தின் வெறிச்செயல்

 

நைபிடா: மியன்மாரில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரும் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது.

ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்கள் இதுவரை 737 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மியன்மாரில் செயல்பட்டுவரும் ஏ.ஏ.பி.பி. என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ராணுவ நடவடிக்கைகளுக்கு அஞ்சி 3 ஆயிரத்து 229 பேர் நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்களை மியன்மார் ராணுவம் கைது செய்து வருகிறது. மேலும், கைது செய்யப்பட்டவர்களை கொடூரமான தாக்குதல் மற்றும் சித்தரவதைகளுக்கு உள்ளாக்கும் கொடூரச் செயலிலும் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களில் 6 இளைஞர்களின் புகைப்படங்களை மியன்மார் ராணுவத்தின் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் ராணுவத்தால் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் முகங்கள் கடுமையாக தாக்கப்பட்டு ரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுக்கு இதுதான் நிலைமை என எச்சரிக்கும் வகையில் மியன்மார் ராணுவம் இந்த இளைஞர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

மியன்மார் ராணுவத்தால் நடத்தப்பட்ட மனிதத்தன்மையற்ற தாக்குதலால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் புகைப்படங்கள் வெளியாகி அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது!

 

0 Comments

leave a reply

Recent News