நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாஜக தோல்வியைச் சந்தித்தது. இதனால் பாஜக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும், தமிழகத்தில் இருந்து ஒருவர் விரைவில் மிஸோரம் மாநிலத்தின் கவர்னராகப் போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரியில் தோல்வியைத் தழுவிய பொன்.ராதாகிருஷ்ணன்தான் அந்த கவர்னர் என்கிறது தகவல். தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவராகவும், மேல்மட்டத்துடன் நல்ல தொடர்பில் இருப்பதற்காகவும் அவருக்குத் தரப்படும் மரியாதையாம் இது!
0 Comments