loader
கூகுள் தமிழனுக்கு அமெரிக்காவின் உயரிய விருது!

கூகுள் தமிழனுக்கு அமெரிக்காவின் உயரிய விருது!

யூ.எஸ்.ஐ.பி.சி. எனப்படும் அமெரிக்க- இந்திய வர்த்தக சபை கூட்டமைப்பு 'குளோபல் லீடர்ஷிப்' என்கிற விருதை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. வர்த்தகத்தில் சிறப்பாகப் பங்காற்றும் இந்தியா மற்றும் அமெரிக்கா பெரு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் 2019- ஆம் ஆண்டிற்கான விருதுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடன் அமெரிக்க பங்குச்சந்தையின் நாஸ்டாக் அமைப்பின் தலைவரான அடேனா ஃப்ரைடா மேனும் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

 



 

0 Comments

leave a reply

Recent News