கோலாலம்பூர், ஏப்ரல் 13: நம் நாட்டில் பலவிதமான கலாச்சாரங்களும், பழக்க வழக்கங்களும் இருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் தனிச்சிறப்பு.
இந்தியர்கள் நாம் பல்வேறு மொழிகளையும், கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் கடைப்பிடித்து வருகிறோம். ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பறிமாறிக்கொள்வது நம் வழக்கம்.
அவ்வகையில் விசு, உகாதி, வைசாக்கி, சித்திரைப் புத்தாண்டை அனைவரும் குடும்பத்தோடு இனிதே கொண்டாடி மகிழ அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்!
0 Comments