கோலாலம்பூர், ஏப்ரல் 12: தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) நிலவரப்படி மொத்தம் 395,891 நபர்கள் தடுப்பூசி இரண்டு டோஸையும் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்துள்ளார்.
அதே காலகட்டத்தில், 583,903 நபர்கள் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.
இதில், 77,252 உடன் சிலாங்கூர் முதல் இடத்தில் உள்ளது.
சரவாக் (61,890), சபா (54,070), பேராக் (52,679) மற்றும் கோலாலம்பூர் (52,110) ஆகிய மாநில மக்கள் மேற்கண்ட எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்!
0 Comments