குவந்தான், ஏப்ரல் 12: கோலாலம்பூர் - காராக் அதிவேக நெடுஞ்சாலையின் 43.4-வது கிலோமீட்டரில் டிரெய்லர் லோரி கவிழ்ந்ததில் லோரி ஓட்டுநரும் உதவியாளரும் கொல்லப்பட்டனர்.
நேற்று இரவு 9 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவ்விருவரும் இறந்ததாக, பகாங் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் சூப்பிரெண்டன் கமருல் சமான் ஜூசோ கூறினார்.
லோரி ஓட்டுநர் இசானி ஹஸ்ரி ஆஸ்மி (44) மற்றும் உதவியாளர் யூசோஃப் மாட் ஜெய்ன் (63) ஆகியோரே பலியானவர்கள் என அடையாளம் கூறப்பட்டுள்ளது.
பெந்தோங் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிரெய்லர் லோரி கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சிதைந்த டிரெய்லரிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை அகற்ற தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடியதாக அவர் கூறினார்!
0 Comments