கோலாலம்பூர் ஜூன் 3-
ஜப்பான் ஜாம்பவான் என அழைக்கப்படும் அகியாமாவுடன் மலேசிய வீரர் அகிலன் தாணி மோதவிருப்பது உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலப்பு தற்காப்பு கலை வீரர்களுக்கான ஒன் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜூன் 15-ஆம் தேதி சீனாவின் ஷங்காய் நகரில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் மலேசிய இந்திய வீரரான அகிலன் தாணி களமிறங்கவுள்ளார். இவர் ஜப்பானின் ஜாம்பவான் வீரரான அகியாமாவை எதிர்த்துக் களமிறங்கவுள்ளார்.
ஜப்பானின் அகியாமா கலப்பு தற்காப்புக் கலையில் முன்னணி வீரராகத் திகழ்பவர்
அதே வேளையில் பல போட்டிகளிலும் வெற்றிகளைக் குவித்துள்ளார்.
அவருடன் அகிலன் தாணி மோதுவது கலப்பு தற்காப்பு கலை போட்டியின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலேசிய வீரரான அகிலன் தாணி, பல முதன்மைப் போட்டிகளில் களமிறங்கி வெற்றிக்காகப் போராடி வெற்றியைப் பெற்றுள்ளார். அதே வேளையில், பல தோல்விகளையும் சந்தித்துள்ளார்.
தற்போது ஜப்பான் வீரர் அகியாமாவுடன் மோதுவது அவருக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இருந்த போதிலும் அந்தச் சவால்கள் அனைத்தையும் முறியடித்து வெற்றிக் கனியைப் பறிப்பேன் என்று அகிலன் தாணி செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்காகப் பல மாதங்களாகக் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வரும் அகிலன் தாணிக்கு பிரேசிலைச் சேர்ந்த பயிற்றுநர் பயிற்சி வழங்கி வருகிறார்.
அகியாமா ஜாம்பவான் வீரராகத் திகழ்ந்தாலும், அது குறித்து எந்தவொரு சிந்தனையும் எனது மனதில் இல்லை.
அவரும் ஒரு வீரர். அவரை வீழ்த்துவது எப்படி என்ற வியூகத்தை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று அகிலன் தாணி கூறினார்!
0 Comments