கோலாலம்பூர், ஏப்ரல் 10- அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி மற்றும் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் இருவர் தொடர்பான ஒலிப்பதிவு ஆடியோ விவகாரம் தொடர்பாக இருவரும் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் தெரிவித்துள்ளார்.
அந்த ஒலிப்பதிவு போலியாக இருக்குமானால் அது குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் போலீசில் புகார் செய்யலாம் என்றும்
ஐ.ஜி.பி கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ள இந்த சூழலில், மக்கள் அவதிக்கு உள்ளாகி வரும்
பிரச்சனையிலிருந்து திசை
திருப்புவதற்காகவே இந்த ஒலிப்பதிவு
விவகாரத்தை கையில்
எடுத்துள்ளதாக அன்வார்
தெரிவித்துள்ளார்.
அந்த ஒலிப்பதிவு உண்மையானதா இல்லையா? என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியம் என்ன?
ஒரு வேளை அது நிஜமாக இருந்தால் அதனால் என்ன பிரச்சனை? அதுவொரு குற்றமா? என்று அன்வார் வினவியுள்ளார்!
0 Comments