பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 9: டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்தான் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என அக்கூட்டணியின் தலைவர்கள் தெரிவித்திருக்கின்றனர். போர்ட் டிக்சனில் நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் தலைமைத்துவ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், அனைத்து மாநிலங்களிலும் தொடங்கவுள்ளதாக ஓர் அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு நடுநிலையுடன், இறையாண்மைக்கு உகந்த நெறிகளுடன் சுபிட்சமாக வழிநடத்தப்படும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதிகளுக்கான திட்டத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்!
0 Comments