கோலாலம்பூர், ஏப்ரல் 8: அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் மற்றும் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் இருவரிடையே நடைபெற்ற உரையாடல் தொடர்பாக அது போலியானது என்று இரு தரப்பு மறுத்து வருகின்றனர்.
ஆனால், இருவரின் குரலை ஒத்திருக்கும் வகையில் வெளியான ஒலிப்பதிவில் இடம்பெற்றிருந்தது அவர்களது நிஜக் குரல்தான் என்று அம்னோவின் முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
10 தடவைக்கும் மேல் அந்த ஒலிப்பதிவை தாம் கேட்டதாகவும் அதில் இடம்பெற்றிருப்பது ஸாஹிட் மற்றும் அன்வாரின் குரல்தான் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்றும் கூட்டரசு பிரதேச அமைச்சருமான அனுவார் மூசா விவரித்தார்.
ஸாஹிட் மற்றும் அன்வாரிடம் தமக்கு நல்ல நெருக்கம் இருக்கிறது என்றும், அவர்கள் இருவரின் குரல்களும் பரிச்சயமானது தமக்கு என்றும், எனவே அந்த ஒலிப்பதிவில் இடம்பெற்றிருப்பது ஸாஹிட் மற்றும் அன்வாரின் உண்மையான குரல்தான் என்பது 100 விழுக்காடு உண்மை என்று அவர் தெரிவித்துள்ளார்!
0 Comments