கிள்ளான், ஏப்ரல் 7: மேற்கு கிள்ளான் துறைமுகம் அருகே செலாட் கெரிங் தீவில் நேற்றிரவில் வெளிநாட்டு வணிகக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட ரசாயனக் கசிவு காரணமாக அதில் பணியாற்றிய துருக்கி
நாட்டுப் பணியாளர் ஒருவர் பலியானார்.
மேலும், அதே நாட்டைச் சேர்ந்த இரண்டு
பணியாளர்கள் உட்பட, ஓர் இந்திய நாட்டுப்
பணியாளரும் வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
UN 1005 அம்மோனியா வகை ரசாயன
வாயுவை சுவாசித்ததன் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்
படைப் பேச்சாளர் ஓர் அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ரசாயனப்
பொருள்களை ஏற்றிச் சென்ற HAMBURG DW
எனப்படும் கப்பலில் அம்மோனியா வகை
ரசாயனக் கசிவு ஏற்பட்டிருப்பதாகச்
சோதனையில் தெரியவந்துள்ளது!
0 Comments