loader
பணிநீக்கம் செய்யப்பட்ட 2,000 தொழிலாளர்களை மீண்டும் அழைப்போம்!  - ஏர் ஆசியா

பணிநீக்கம் செய்யப்பட்ட 2,000 தொழிலாளர்களை மீண்டும் அழைப்போம்! - ஏர் ஆசியா

 

கோவிட் -19 தொற்றின் தாக்கத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட தனது ஊழியர்களை, திரும்பப் பணியில் அமர்த்த ஏர் ஏசியா குழுமம்  நோக்கம் கொண்டுள்ளது என அதன் தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் தெரிவித்தார் .

சுமார் 2,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது ஒரு சோகமான தருணம். எனவே, குறைந்த கட்டண விமானச் சேவையின் திறனில் நம்பிக்கை கொண்டு, மீண்டும் தனது பணியாளர்களை வேலைக்கமர்த்த திட்டம் வகுப்போம் என அவர் உறுதியளித்தார்.கடந்த ஆண்டு அக்டோபரில், ஏர் ஏசியா மற்றும் அதன் நீண்ட தூரப் பயணப் பங்காளியான ஏர் ஏசியா எக்ஸ் ஆகியவை, அதன் 24,000 தொழிலாளர்களில் சுமார் 10 விழுக்காட்டினரைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது!

 

 

0 Comments

leave a reply

Recent News