கோலாலம்பூர், ஏப்ரல் 7- அம்பாங், தாமான் பண்டான் இன்டாவில் உள்ள அடுக்கு மாடி வீட்டில் நெஞ்சில் கத்திக் குத்து காயத்துடன் ஆடவர் ஒருவர் இறந்துக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
30 வயதுடைய அந்த ஆடவர் வீட்டின் படுக்கை அறையில் இறந்து கிடந்ததைக் கண்ட குடும்ப உறுப்பினர் ஒருவர் போலீசிற்கு தகவல் கொடுத்ததாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் பாருக் ஈசாக் கூறினார்.
இதனையடுத்து, போலீஸ் தடயயியல் பிரிவின் அதிகாரிகள் மோப்ப நாய் துணையுடன் விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கொலை குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்!
0 Comments