கோலாலம்பூர். ஏப்ரல் 5- சிகாம்புட் ஓம்ஸ்ரீ மகா மதுரை வீரன் ஆலயம் உடை படும் என்ற தகவல் வெளியானதிலிருந்து அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த ஆலயத்தை மேம்பாட்டு நிறுவனம் இன்று உடைக்கும் என தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு காலையிலேயே கலகத் தடுப்பு போலீஸ் உட்பட அதிகமான போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனால் ஆலய பக்தர்கள் எவரும் அந்த ஆலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆலய நிர்வாக் குழுவினர் மட்டுமே அப்போது ஆலயத்தில் இருந்தனர்.
ஆலயத்தை உடைக்கும் மேம்பாட்டு நிறுவனத்தின் முடிவுக்கு எதிராக ஆலய நிர்வாகம் முன்கூட்டியே தடையுத்தரவு பெறப்பட்டதைத் தொடர்ந்து, ஆலயத்தை உடைக்கும் முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது!
0 Comments