கோலாலம்பூர், ஏப்ரல் 5: மஇகா தேசிய முன்னணியிலிருந்து வெளியேறுவதை மூத்த அம்னோ தலைவர் முஸ்தபா யாகோப் வரவேற்றுள்ளார்.
மஇகாவின் நடவடிக்கை குறித்து தாம் கவலைப்படவில்லை என்றும், அலையன்ஸ் கூட்டணி காலம் முதல் தேசிய முன்னணி வரை அவர்கள் அம்னோவுக்குச் சுமையாகத்தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
15-வது பொதுத் தேர்தலில் மஇகாவை வெல்லக்கூடிய கூடுதல் இடங்களை தேசிய கூட்டணி ஒதுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், மஇகாவுக்கு வழங்கப்பட்ட மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியை அம்னோ நிச்சயமாக நிரப்பும் என்றும் அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக மஇகா அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!
0 Comments