loader
பேருந்து கவிழ்ந்து 14 பேர் காயம்!

பேருந்து கவிழ்ந்து 14 பேர் காயம்!

ஈப்போ, ஏப்ரல் 4 : பேராக், ஈப்போவில் உள்ள மெனோரா சுரங்கத்தைக் கடந்த விரைவுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து இன்று அதிகாலை மணி 2.22 மணியளவில் அவசர அழைப்பை பெற்றதாக பேராக் தீயணைப்பு மீட்பு படையின்
பேச்சாளர் தெரிவித்தார்.

கூலிமிலிருந்து கோலாலம்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருப்பதாக, ஈப்போ மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் மொஹமட் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.

ஓட்டுநர் தூக்க கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக, தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News