loader
SOP விதிமுறை மீறிய அறுவர் கைது!

SOP விதிமுறை மீறிய அறுவர் கைது!

 

கோலாலம்பூர்: SOP விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். 

MY SEJAHTERA செயலியில் சுயவிவரங்களைப் பதிவு
செய்யாதது, அனுமதி இல்லாமல் மாநிலம் அல்லது மாவட்டம் கடந்து சென்றது, சுவாசக் கவசம் அணியாதது போன்ற குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், ஓப்ஸ் பெந்தேங் நடவடிக்கை மூலம்,
சட்டவிரோதக் குடியேறி ஒருவரும், ஐந்து
கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டதுடன்
மூன்று வாகனங்களும் பறிமுதல்
செய்யப்பட்டன.

வெள்ளிக்கிழமை வரை, 259 சாலைத் தடுப்பு
நடவடிக்கைகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News