loader
கொரோனா: இன்று 1,638 புதிய சம்பவங்கள்! 3 பேர் மரணம்!

கொரோனா: இன்று 1,638 புதிய சம்பவங்கள்! 3 பேர் மரணம்!

 

கோலாலம்பூர், ஏப்ரல் 3: இன்று 1, 638 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளது.  இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 349, 610ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று 3 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதன் மூலம் கொரோனாவால் நாட்டில் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,286 ஆக உயர்ந்துள்ளது.

இன்று  இந்நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,449 ஆகும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 333, 892 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 14, 432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 167 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 81 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News